நகைச்சுவை கதை
[01]ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள். அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள். எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார், எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும். சிறுமி சிறிது நேரம் யோசித்து விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், அம்மா நீங்களே பகிர்ந்து கொடுங்கள். உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.
........................................................................................................................................
[02] கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: லண்டனுல இருந்து ஸ்ரீலங்கா கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் லவ்வர் பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்தர வேண்டும் என கேட்க கூடாது...
கடவுள்: ஸ்ரீலங்கா கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
........................................................................................................................................
[03] ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.
........................................................................................................................................
[01]ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள். அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள். எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார், எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும். சிறுமி சிறிது நேரம் யோசித்து விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், அம்மா நீங்களே பகிர்ந்து கொடுங்கள். உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.
[02] கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: லண்டனுல இருந்து ஸ்ரீலங்கா கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் லவ்வர் பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்தர வேண்டும் என கேட்க கூடாது...
கடவுள்: ஸ்ரீலங்கா கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
........................................................................................................................................
[03] ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.
........................................................................................................................................
சூப்பர்
ReplyDelete