Search

Tuesday, November 20, 2012


தமிழ் தத்துவங்கள் - Part 2
---------------------------------------------



[01]மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது....
மிகவும் சந்தோஷமான விஷயம்
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...
[02] ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.


[03]குற்றம் புரிந்தவனும்
தனக்கு நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்...
யாருக்கு அதை வழங்குவது என்பதை ....பணம் முடிவு செய்கிறது..!!!
-கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன்..



[04]நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்.....


[05]தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்கு தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும். தனக்குள் தான் நிலையாகாதவன் தான் 
பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.


[06]எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.....
இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து வைத்திருந்தது அவர்களின் திறமையா...? அல்லது அறியாமல் இருந்தது நமது அறியாமையா....???

[07]"இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை..


[08] தேவையில்லாததையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால்....தேவையானதையெல்லாம் விற்க வேண்டி வரும்.......

[09]உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.
பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்..
உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள். 
உறவுகளை அன்புடன் நேசியுங்கள்.. அன்பை மட்டுமே சுவாசியுங்கள்...

[10]அறிவுடையார் நிகழக்கூடியதையும் அறிவர்.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடைமை.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மை.

[11] வெற்றி - உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
தோல்வி - போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.

தோல்வி - நீ யாரென்று உனக்கே காட்டும்...

[12]நமது மனஉறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கபடிதான் நமது வெற்றியின் அளவும் இருக்கும்....



[13]துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்...


[14] பொறுமையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், 
சகிப்புத் தன்மையும், தெளிவான சிந்தனையும் இருந்தால்...... வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்....!

[15] ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் 
அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால இணையில்லாத இன்பநிலையை அடையலாம்..

[16]*** உலகத்தில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.....
நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை....

[17]உன்னை நேசிக்கும் இதயத்தை, சாகும் வரை மறக்காதே...
உன்னை மறந்த இதயத்தை, வாழும் வரை நினைக்காதே....


[18]***உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே.
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு…

முடிந்த பிரச்சினைகளுக்காக வருந்தாமல்,
வரும் காலத்தை துணிந்து எதிர்கொள்....


[19]***உலகில் எந்த ஒரு மனிதரையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்.....
நாளை நீ கண் மூடிவிட்டால்... 

அவர்கள் உன்னையும், உண்மையையும் மூடி விடக்கூடும்......
[20] உழைக்கும்போதே வெற்றியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல்,
உழைப்பை கடமையாக கொள்ளுங்கள்.. இயற்கை நியதிப்படி, வெற்றி விளைந்தே தீரும்

[21] கடவுளிடம் சொல்லாதோ, உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று..
உன் பிரச்சனைகளிடம் சொல், உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று..


[22] எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.....!!


[23] உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்..நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்...இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது......

[24] புது உடைகளும்,பழைய நண்பர்களும் இனிப்பவர்கள்.....
[25] பேராசை இல்லாதிருக்க "கிடைத்தது போதும்" என்ற பொன்மனம் வேண்டும்.

[26] நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட, உன் குணத்தை காட்டும்....ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ, உன்னையே காட்டும்.....

[27] வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை.. ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 
இன்னொருவரை காரணம் காட்ட கூடாது... அப்படி செய்வதனால், அவர்கள் மேலும் பல வெற்றிகளை இழக்க நேரிடும்... தனது தவறுகளை உணர்த்து, திருத்திக்கொண்டு மீண்டும் முயற்சித்தால்.... பல வெற்றிகளை குவிக்கலாம்...

[28] நேர்மையும்,நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின்...உதவியும் உள்ளது.

[29] தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.

[30] செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு, அதைத் தேடி, உண்மையாக உழைப்பவனே....."வெற்றி" என்னும் நற்கனிகளை பெற தகுதியானவன்

[31] துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்

[32] 
ஒரு மனிதனின் உயர்வும், தாழ்வும் அவரவருடைய எண்ணத்தின் இயக்கத்தை பொறுத்தே அமைகிறது. எண்ணம், செயல், நடத்தை ஆகிய அம்சங்கள் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மனதை மேம்படுத்தவேண்டும். இல்லையேல் நமது வாழ்க்கை ஒரு செல்லரித்த வாழ்க்கையே..

[33]படகு கரை சேர்வதுக்கு துடுப்பு மட்டுமே உதவும்....
அது போல்
நம் வாழ்வில் கரை சேர்வதுக்கு உழைப்பு மட்டுமே உதவும்....


[34]வெற்றி : இதுவரை நான் பெறாதது...!
தோல்வி : அடிக்கடி சந்திப்பது...!
பாசம் : அவ்அப்போது வந்து போவது...!
கோபம் : கேட்காமல் வருவது...!
பாராட்டு : கிடைத்தும் நிலைக்காதது...!
சொந்தங்கள் : எதுவும் எனக்காக இல்லை...!
கனவுகள் : எப்போதும் இருப்பது...!
சிரிப்பு : சிலரால் வருவது...!
நிழல் : என்னோடு கூடவே வருவது...!
மகிழ்ச்சி : வெளி உலகிற்கு மட்டும்...!
பொறுமை : நானாக உருவாக்கியது...!
ஓய்வு : தற்போது இருப்பது...!


[35]சிலரது அக்கறை..... சிலருக்கு அரியண்டம்!
சிலரது காதல்..... சிலருக்கு காமடி
சிலரது அழுகை..... சிலருக்கு சிரிப்பு!
சிலரது துக்கம்..... சிலருக்கு சந்தோஷம்!
சிலரது ஆதங்கம்..... சிலருக்கு ஆனந்தம்!
என்ன செய்ய? சிலவேளைகளில் “உண்மை ஊமையாகும் போது கண்ணீர் மொழியாகின்றது”......

[36] 
ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது.
ஆனால்... அவரவரின் குறைகள் 
மங்கலாகக் கூடத்தெரிவதில்லை....

மேலோட்டமாக பார்த்தாலே அடுத்தவர்களுடைய  குறைகளைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால்...
நம் குறைகளைப் பார்க்க, தெளிந்த பார்வை இருந்தால் மட்டுமே முடியும்..

[37] 

நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம்...
ஆனால்....

நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை...


[38] 
பல துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயரமுடியும்...

[39] எதையும், எல்லாவற்றையும் உங்களால் செய்ய இயலும்... அதற்குண்டான அனைத்து சக்தியும் உங்களிடம் உள்ளது 
என்பதை நீங்கள் முழுமையாக நம்புங்கள்......

[40] சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கபடுகிறான்.
பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.

[41] பிறப்பது ஒரு முறை, வாழ்வதும் ஒரு முறை,  பிறகு எதற்கு "கோபம்" என்னும் "வன்முறை".

[42] நம்பிக்கை என்பது ஜாடி போன்றது. உடைந்த பின் ஒட்டி வைக்கலாம். ஆனால் முன்பு போல் இருக்காது...

[43] உன் மீது பிரியம் உள்ளவர்கள் நீ பொய்யை சொன்னாலும் நம்பிவிடுவார்கள்..
உன் மீது பிரியம் இல்லாதவர்கள் நீ உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள்..


[44]அலைகள் ஓய்ந்த பிறகு தான், கடலில் குளிப்பதென்பது முடியாது.
நீந்தத் தெரிந்த பிறகே, 

நீரில் இறங்குவது என்பதும் இயலாது.
வாழ்க்கையும் அப்படித்தான்......

*[45] ஏழைகள்...... "உணவு இல்லை" என்பதால் உண்ணவில்லை...
பணக்காரர்கள்... "பசியில்லை"என்பதால் உண்ணமுடிவதில்லை


*[46] நன்மை தரும் ஏழு விஷயங்கள்.
1) பதவியிலும் பணிவு.
2) துன்பத்திலும் துணிவு.

3) ஏழ்மையிலும் நேர்மை.
4) செல்வத்திலும் எளிமை.
5) கோபத்திலும் பொறுமை.
6) தோல்வியிலும் விடாமுயற்சி.
7) வறுமையிலும் உதவி செய்யும் மனம்.

[47]))))))).....அரசியல்வாதிகள்.....(((((((
இலட்சங்களுக்காகவும், இருக்கைகளுக்காகவும்
இலட்சியத்தை அலட்சியம் செய்பவர்கள்......



[48]காகிதம் மேலே பறப்பது காற்றடிப்பதால்.... ஆனால்...
 பறவை மேலே பறப்பது அதன் முயற்சியால்... 

அதனால்...
உழைப்பை நம்புங்கள்.... அது மட்டுமே வெற்றியை கொண்டு வரும்...



[49] குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகின்றான்.
குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.....

[50] நீங்கள் நல்லவராக இல்லை என்றாலும் பரவாயில்லை..
நல்லவரை போல நடியுங்கள்.... 

நல்லதையே செய்வது போல நடியுங்கள்...
நல்லதையே பேசுவது போல நடியுங்கள்....
நாளடைவில் அந்த சூழலே உங்களை நல்லவராக்கி விடும்.....

[51] பிரச்சனைகள் அனைத்தும் தற்காலிமானவையே.... உங்களின் பழைய பிரச்சினைகள் எத்தனை நாட்கள் உங்களை வாட்டியது, எப்படி தீர்ந்தது. 
என்று சற்றே சிந்தித்து பாருங்கள்......

பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம்....





*[52] 
நம் கையை விட்டு போன இறந்த காலம்....
இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம்....
ஆகியவற்றைபற்றி கவலைப்படுவதால் தான்,
நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது..

[53] "நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்கள்" என்பது
"எதிர் காலத்தில் என்னவாக இருக்கப்போகிறீர்கள்"
என்பதைக் காட்டிலும் முக்கியமானது...

[54]
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை.
அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.
சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை.

நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை...
பகலுக்காக மகிழ்வதுமில்லை...

[55]

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும்  அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில் தான் தோன்ற மறுக்கிறது.

[56]

ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்,உன் விழிகளை கண்ணீரால் நிரப்பாதே...
அது உன் முன் உள்ள மற்றொரு 
வாய்ப்பை மறைத்துவிடும்......
புன்னகையோடு முயற்சித்துப்பார்...... அது உன் கஷ்டங்களை மாற்றிவிடும்..


[57]
ஒருவன், "தான் பெரியவன்" என்னும் தன்முனைப்போடு இருக்கும் வரை அவனுள் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தன்னலமற்ற தன்மையுடன் உலகத்திற்கு பயனுள்ளவனாக மாறும்போதே அவன் தன்னிலையிலிருந்து உயர்வடைகிறான்.

[58]
அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்...
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்.. இது தான் அனுபவ பாடம்.....


[59] உழைப்பை தேடி ஓடு...  உதவியை தேடி ஓடாதே....

[60] விண்ணை தொடும் போதோ, எனது "மதி" என்கிறான்...
       மண்ணில் விழும் போதோ, 
எனது "விதி" என்கிறான்...
       வெற்றியை தனதாக்கி கொள்ளும் மானிடன்,
      தோல்வியை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.

[61] 
"முடியாது" என்று நீங்கள் சொல்வதையெல்லாம்.....
         யாரோ ஒருவன்.... எங்கோ... செய்து கொண்டு தான் இருக்கின்றான்...

[62] "தேவை" என்பது பலவீனமானவரையும் பலசாலியாக்கி விடும்.

[63]  வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்...
         பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்து விடும்.

[64] உண்மையை சொல்.. உறுதியாக சொல்... அதை தைரியமாக சொல்......

[65] சவால்களுக்காக சந்தோஷப்படுங்கள்.... அவை தான்...
        உங்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும்  திறமைகளை வெளிப்படுத்துகிறது...

[66] எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே....

[67] ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..         உன்னைப்போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...

[68] படிப்படியாய் மேல்நோக்கி செல்வதே வாழ்க்கை.
        இன்பம் மேலே மட்டுமல்ல, ஒவ்வொரு படியிலும் கூட இருக்கிறது....

[69] உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும் சாதித்தவர்கள் உங்களையும், என்னையும்         போன்று மனிதர்களே..
வீரமும், விவேகமும் இருந்தால்.. நம்மைப் போன்ற மனிதர்கள்  எதையும் செய்து முடிக்க முடியும்......
* [70]நினைப்பதெல்லாம் நடந்து விடாது....
         ஆனால்... நினைக்காமல் எதுவுமே நடக்காது...
[71] எதிலும் பரபரப்பு தேவையில்லை.. ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை....
*[72] வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.        வெற்றி சிரித்து மகிழ வைக்கும்........!        தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்....!!
[73] நேர்மறை எண்ணங்களுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும், இடையிலான போராட்டம்    தான், நம் வாழ்க்கை......
[74] நீங்கள் பெரிய காரியங்கள் செய்ய தேவை இல்லை. சிறு காரியங்களை கூட முழு அன்புடன் செய்யுங்கள். அதுவே பெரிய செயலாகும்...
[75] உன்னை வழிநடத்த, அறிவை பயன்படுத்து...!!! மற்றவர்களை வழிநடத்த, இதயத்தை (அன்பை) பயன்படுத்து...!!
[76]ரகசியத்தை காப்பாற்றினால், அது உன் அடிமை.....
       வெளியிட்டால், அது உன் எஜமான்....
[77] மண்டியிட்டு வாழ்வதை விட, எதிர்த்து நின்று மரணிப்பதே மேல்...
[78] நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட... நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்..
[79] எதிரிகளை ஒழிக்க, அவர்களை நண்பனாக்குங்கள்...
[80] "முடியாது" என்று சொல்ல வேண்டிய இடங்களில் "தயவு செய்து முடியாது" என்று கனிவாக சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்..
[81] நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால்       இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...